காஞ்சிபுரம், ஜூன் 19: இலவச தையல் இயந்திரம் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழ்நாடு, சமூகநலத் துறையின் கீழ் 2019-20ம் நிதியாண்டுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.இலவச தையல் இயந்திரம் வேண்டுவோர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வருமானச் சான்று ₹72000க்குள் இருத்தல் வேண்டும். விதவை / கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தால், அதற்கான சான்று, ஜாதி சான்று ஆகியவை வட்டாச்சியரிடம் பெற்றிருக்க வேண்டும்.