மதுராந்தகம், ஜூன் 19: தினகரன் செய்தி எதிரொலியாக, விநாயகநல்லூரில் பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில், புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வேடந்தாங்கல், சித்திரக்கூடம், வளையபுத்தூர், சித்தாத்தூர், துறையூர், விநாயக நல்லூர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு, 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் விநாயக நல்லூர் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்காத, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வேடந்தாங்கல் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.