மக்காச்சோளத்துக்கு காப்பீடு வழங்க தாசில்தாரிடம் விவசாயிகள் மனு

வேப்பூர், ஜூன் 19:  மக்காச்சோளத்துக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகை வழங்க கோரி வேப்பூர் தாசில்தார் செந்தில்வேலிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:கடந்த 2016, 2017ம் ஆண்டில் மக்காச்சோளம் பயிரில் காப்பீட்டுத் தொகை பெற சேப்பாக்கம் கூட்டுறவு வங்கியில் பிரீமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்யப்பட்டது. இதில், சாகுபடி பயிர்கள் மழையின்றி கருகியதை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மேலும், 2018-19ம் ஆண்டில் மக்காச்சோளம் சாகுபடி செய்த போது, அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் அவைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதாக கூறிய நிலையில், இதுவரை தமிழக அரசு நிவாரணம் வழங்கபடவில்லை. எனவே, மக்காச்சோளத்துக்கு காப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: