மன்னார்குடி, ஜூன் 13: கூத்தாநல்லூர் நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன முறையில் குப்பைகளை சேகரிக்க ரூ 21.60 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்கள் மற்றும் 72 குப்பை தொட்டிகள் வாங்கப் பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினம் தோறும் 2 டன் குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது.இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் நவீனமுறையில் குப்பைகளை சேகரிக்க ரூ 21.60 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்கள் மற்றும் 72 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறுகை யில், திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கூத்தா நல்லூர் நகராட்சியில் நவீன முறையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியால் இயங்கக்கூடிய 12 புதிய வாகனங்களும், தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் வாரியாக பிரிக்க ஏதுவாக 72 புதிய குப்பை தொட்டிகள் ரூ 21.60 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் அபாயகரமான கழிவுகள் என தனித்தனியாக பிரித்து வாங்கப்பட உள்ளது. மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் மக்கும் குப்பைகளை பிரித்து அவற்றை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.