ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல் சிறுமியை திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

கும்பகோணம், ஜூன் 12: கும்பகோணம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தை சேர்ந்த ரங்கராஜன் மகன் சுரேஷ் (30). இவர் கும்பகோணம், இளங்கா நகரில் உள்ள லாரி உரிமையாளர் ஆறுமுகம் என்பவரின் லாரியில் கிளீனராக வேலை செய்து வருகிறார். கடந்த 3 மாதத்துக்கு முன் கும்பகோணம் சத்யா நகரை சேர்ந்த ராஜசேகர் மகன் விஜய் (18) என்பவர், லாரி உரிமையாளர் ஆறுமுகம் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

கடந்த 10ம் தேதி, விஜய், ஆறுமுகத்தின் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், விஜய்க்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கிளீனர் சுரேஷ் இதுகுறித்து கேட்டபோது அவரை உருட்டு கட்டையால் விஜய் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சுரேஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தியபோது ஆறுமுகம் தனது 17 வயது மகளை விஜய் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் விஜயை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். காய்ந்து வரும் தேக்கு மரங்கள் கச்சமங்கலம் தடுப்பணை அருகிலேயே கிராவல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதை விட மிகவும் கூடுதலாக 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் தண்ணீர் தேடி வரும் ஆடு, மாடுகள் பள்ளத்தில் விழுந்து மூழ்கி இறக்கின்றன.

Related Stories: