தேவாலயத்தில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

சென்னை, ஜூன் 11: சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை ேசர்ந்தவர் செல்வராஜ்(40). நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூரில் உள்ள சந்தோம் தேவாலயத்துக்கு வழிபாடு செய்ய தனது பைக்கில் சென்றார். பைக்கை தேவாலயத்துக்குள் நிறுத்திவிட்டு, வழிபாடு செய்ய உள்ளே சென்று விட்டார்.

பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த செல்வராஜ், தனது பைக் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின்படி மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து சாந்தோம் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: