கடலூர், ஜூன் 7: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மழை காலததில் வழிந்தோடும் மழைநீரை பண்ணைக் குட்டைகளில் சேமித்து வைத்து தேவையான போது விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாய பயிர்களை பாதுகாத்து விவசாயத்தினை அதிகரிக்க செய்து அதிக மகசூல் அடையலாம். பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாக இருப்பதால் விவசாயிகளிடம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழக அரசு கடலோர மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20ம் ஆண்டில் பண்ணைக் குட்டைகள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை பண்ருட்டி, அண்ணாகிராமம், கீரப்பாளையம், மேல்புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, விருத்தாசலம், கம்மாபுரம், மஙகளூர் மற்றும் நல்லூர் ஆகிய அனைத்து வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ.2.5 கோடி மானியத்தில் அமைக்கப்பட உள்ளது.