இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு

மதுராந்தகம், ஜூன் 4: அச்சிறுப்பாக்கத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் நடந்தது.அமைப்பின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் காசிம் தலைமை தாங்கினார். மதுராந்தகம் திமுக எம்எல்ஏ புகழேந்தி, கற்பக விநாயகா கல்வி நிறுவனங்களின் தலைவர் அண்ணாமலை ரகுபதி, செண்டு கல்லூரி முதல்வர் முகமது அப்துல் காதர், ஜியாவுதீன், ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். நோன்பு நிகழ்ச்சியின் முடிவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: