புதுக்கோட்டை, மே 30: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு தூத்துக்குடி வந்த ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.சண்முகையாவிற்கு வாகைக்குளம் விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்துவிட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். அவரது ஆலோசனைபடி நானும் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கனிமொழி எம்.பி. ஆகியோர் இணைந்து குடிநீர் பிரச்சனைகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருவேன் என்றார். அதன்பிறகு அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.