திருவாரூர், மே 25: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என நாகை தொகுதியில் வெற்றிபெற்ற இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நாகை எம்பி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் தனக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் சரவணனை விட 2 லட்சத்து 11 ஆயிரத்து 353 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார். பின்னர் இவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தொகுதியின் பொது பார்வையாளர் நேமோ மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.