மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி, மே 25: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதியில் உள்ள பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதை அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய கீழ்கவரப்பட்டை சேர்ந்த ஜெயச்சந்திரன்(22), கோதண்டபாணி(26), கதிர்காமன்(43) ஆகிய மூவரையும் கைது செய்து மாட்டு வண்டிகளையும பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: