மன்னார்குடி, மே 21: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா சுவாமி தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தார். அவரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, தமிழக கர்நாடகாவிற்கு இடையே 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை காவிரி மேலாண்மை ஆணையம், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதின் அடிப்படையில் மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கண்டிப்புடன் பின் பற்றுவதுடன், காவிரியில் உபரி நீர் தமிழகம் வழியே ஆண்டொன்றுக்கு சுமார் 30 டிஎம்சி முதல் 100 டிஎம்சி வரை வங்கக் கடலில் கலப்பதை தடுத்து தமிழக எல்லையான ராசி மணலில் தமிழக அரசு அணைகட்டி தண்ணீரை பயன்படுத்தி கொண்டு காவிரி வலது கரை கர்நாடகாவிற்கு சொந்தமென்பதால் மின்சாரத்தை கர்நாடகம் உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் ஒத்துழைப்புக் கொடுக்க வலியுறுத்தினேன். ஜூன் 12ல் ராசி மணல் அனைகட்ட துவக்க உள்ளோம் என்பதையும் எடுத்துரைத்தேன்.