விருத்தாசலம், மே 21: விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா (60). இவருக்கு தீராத வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. பல மருத்துவ
மனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாரதிராஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பாரதிராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.