மன்னார்குடி, மே 19: மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மங்கள நாயகி உடனுறை ராமநாதசுவாமி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற வைகாசி விசாக பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 15 வருடத்திற்கு முன்பும், கடந்த ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் பழைய தேர் ஒன்று இருந்துள்ளது. இதன் வரலாறு குறித்து தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் இருக்கும் பழைய ஆவண குறிப்புகளின் அடிப்படையில் சுமா 150 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது என்ற குறிப்பு கிடைத்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக தேரோட்டம் நின்று போய்விட்டது.