வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் கடந்த மாதம் சரக்கு வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த வேனை வெண்குடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேனில் இருந்து, 3 மர்ம நபர்கள் டயர்களை திருடுவதாக நேற்று வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று 3 நபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இவர்கள், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரபாகரன் (21), சூர்யா (20) மற்றும் வள்ளல் பச்சையப்பன் தெரு தேவகுமார் (30) என தெரிய வந்தது. இவர்கள், சாலையோரம் இருக்கும் விபத்துக்குள்ளான, வாகனங்களிலிருந்து திருடுவது தெரியவந்தது.