சூலூர்,மே 15: சூலூர் திருச்சாலை விரிவாக்கம் தரமின்றி அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சூலூர் திருச்சி சாலை சிந்தாமணிப்புதூர் முதல் காங்கேயம் பாளையம் வரை அகலப்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. இதில் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பாலங்களை அப்படியே விட்டுவிட்டு அதனை ஒட்டியே தொடர்ந்து பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலங்களில் கம்பி கட்டி காங்கிரீட் அமைப்பதற்கு பதிலாக தரமற்ற சிமெண்ட குழாய்களைப் பதித்து அதன் மீது தார்சாலை அமைக்கின்றனர்.