கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

 

கோவை, ஏப்.29: கோவை மாவட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், மாவட்ட துணை இயக்குநர் திருமுருகன், மாவட்ட உதவி இயக்குநர் இளங்கோ, பொள்ளாச்சி உதவி இயக்குநர் ஓம் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கால்நடை மருத்துவர்கள் அத்தியாவசிய மருத்துவ பணியாளர்கள் என்ற‌ கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கால்நடை மருத்துவர்கள் பங்களிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அறிமுக விழா மற்றும் பதவி உயர்வு பெற்ற கால்நடை மருத்துவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் பேசுகையில், “கால்நடை துறையில் உள்ள பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும். பதிவேடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கப்படும். கோவை மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் இடையே நல்லுறவை ஏற்படுத்த கருத்துரு உருவாக்கம் குழு ஏற்படுத்தப்படும்” என்றார்.

The post கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: