ஓட்டப்பிடாரம், மே 14: குளங்கள் தூர் வார நடவடிக்ைக எடுக்கப்படும் என ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா பேசினார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா நேற்று கருங்குளம் வடக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட மியாகான்பள்ளி, அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, அகரம், உழக்குடி, கலியாவூர், காலாங்கரை, விளாத்திகுளம், கோனார்குளம், நானல்காடு, பாறைக்காடு, வல்லநாடு ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கிராமங்களில் சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.