திருத்துறைப்பூண்டி, மே 14: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் கஜா புயலில் சாய்ந்தும் 6 மாதங்களாக அகற்றப்படாமல் கிடக்கும் மரங்களை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர பகுதிகளில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்கள், மரங்கள் பல இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதுபோன்று அனைத்து பள்ளி வளாகங்களிலும் சாய்ந்துள்ள மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஜா புயலில் சாய்ந்த மரங்களை ஆறு மாதங்களாகியும் இன்னும் அப்புறப்படுத்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.