திருக்கழுக்குன்றம்: மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவமனை புதிதாக கடந்தாண்டு முதல் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பை-பாஸ் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த சித்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது முதல் பொதுமக்கள் அதிகளவு இங்கு வந்து தங்களது உடலை பரிசோதித்து சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க வேண்டிய இந்த மருத்துவமனை மதியம் வரை மட்டுமே இயங்குவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இது குறித்து நோயாளிகள் கூறுகையில், ‘இந்த சித்த மருத்துவமனை பொது மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு தற்போது கடந்தாண்டு முதல் மத்திய அரசால் இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.