சென்னை: பெரம்பூர் அடுத்த திரு.வி.க.நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில், மாயமான சிறுமி அரக்கோணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அரக்கோணம் சென்று அந்த சிறுமியையும், உடன் இருந்த 2 வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தி.நகரை சேர்ந்த பெருமாள் (20) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று, அரக்கோணத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.