காரைக்கால், மே 9: சாலை ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுமாறு திருமலைராயன்பட்டினம் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள வணிக வளாகத்தினர், கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது.