செய்துங்கநல்லூரில் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலையொட்டி செய்துங்கநல்லூரில் பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தினர். ஓட்டப்பிடாரத்தில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.  இதையொட்டி பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி. கோவில் பத்து உள்ளிட்ட 21 பஞ்சாயத்துகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைந்துள்ளது.  இந்த பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் செய்துங்கநல்லூர் வந்து செல்கின்றனர். எனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாசில்தார் நாக சுப்பிரமணியன் தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர்  பேச்சிமுத்து, தலைமை காவலர் ஜோதி கிருஷ்ணன், அகிலா மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: