தேனி, மே 3: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற மே 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பகல், இரவு என நாள் முழுவதும் நடக்கும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாமிகும்பிட்ட பின்னர், குடும்பத்துடன் குதூகளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் பொழுது போக்கு அம்சங்கள் நடத்தப்படுவது வழக்கம்.