சின்னமனூர் பகுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சின்னமனூர், ஜூன் 20: சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போன்றவைகள் பெட்டிக்கடையில் அதிகமாக விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுரேஷ் கண்ணன், மற்றும் ஓடைப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் ஆகியோர் இரண்டு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடைகளில் புகையிலை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

The post சின்னமனூர் பகுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: