ஆம்பூர், ஏப்.30: ஆம்பூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட பேட்டரி குப்பை வண்டிகள் தரமற்று இருப்பதால் அடிக்கடி உடைந்து விடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்கள் மூன்று சக்கர தள்ளு வண்டிகளில் குப்பை அகற்றி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹1.80 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஆம்பூர் நகராட்சியில் முதல் கட்டமாக 28 பேட்டரி குப்பை வண்டிகள் வழங்கப்பட்டு குப்பை சேகரிக்க பயன்படுத்தபட்டு வருகின்றன. மேலும், 25 குப்பை வண்டிகள் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சிக்கு வழங்கப்பட உள்ளன.