திருமலை, ஏப்.25: பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி காதல் தம்பதி டிஜிபி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு மண்டலம், நாகிரெட்டிகாரி பல்லியை சேர்ந்த யுவராஜூம், பூதலப்பட்டை சேர்ந்த உஷாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து யுவராஜின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் உஷாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், தங்களது சொத்துக்காகவே யுவராஜ் தனது மகளை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்வதாகவும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்தால் யுவராஜை கொலை செய்து விடுவதாகவும் மகளை மிரட்டினராம்.