பிரிட்ஜ் அருகே தூங்கியபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

வேளச்சேரி, ஏப்.24: வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகரில் பிரிட்ஜ் அருகே தூங்கியபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.திண்டுக்கல்லை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கடந்த வாரம் சென்னைக்கு வந்து வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர், 8வது குறுக்கு தெருவில் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அறையில் பிரிட்ஜ் அருகே படுத்து தூங்கினார். அப்போது, திடீரென பிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்டு மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு, நண்பர்கள் எழுந்து பார்த்தபோது அவர் இறந்தது தெரிந்தது.தகவலறிந்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories: