முத்துப்பேட்டை, ஏப். 19: முத்துப்பேட்டையில் தனக்கு அதிகளவில் ஓட்டுகள் விழும் வாக்கு சாவடி மையத்தில் மிஷின் பழுதடைந்ததால் அதிர்ச்சி அடைந்த இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் நீண்டநேரம் அமர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளது. இந்நிலையில் இங்கு உள்ள மிஷின் காலை துவக்கத்தில் பழுதடைந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் இங்குள்ள பெரும்பாலான வாக்குகள் தனக்கு விழவேண்டியது என்பதை அறிந்து போக மனமில்லாமல் நீண்டநேரம் பூத்துக்குள் அமர்ந்து வேறு மிஷின் கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒருவழியாக சுமார் 5 மணி நேரம் கழித்துதான் இங்கு மாற்று மிஷின் கொண்டு வரப்பட்டு வாக்கு பதிவு நடந்தது.