ஆம்பூர், ஏப்.18: ஆம்பூரில் ஓட்டுக்கு பணம் வழங்கியபோது பறக்கும் படையினர் ₹59 ஆயிரம் பறிமுதல் செய்தனர். வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மக்களவை தொகுதியில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் மட்டும் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வீராங்குப்பம் ஊராட்சியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.அதன்பேரில், பறக்கும் படையினர் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் ஓட்டுக்காக வாக்காளர்களிடையே பணம் விநியோகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.