சாத்தான்குளம், ஏப்.17: உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தை அணுக நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை சம்மந்தப்பட்டவர்களாகவோ வக்கீல்கள் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம். சமரச மையத்தில் பிரச்னைகளுக்கு நேரடியாக பேச்சு வார்த்தை நடக்கிறது. பயிற்சி பெற்ற சமரசர்கள் பேச்சு வார்த்தையை வழி நடத்துகின்றனர். உகந்த தீர்வுகள் எட்டப்படுவதால் மேல்முறையீடு என்பதில்லை. செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமரச முடிவினால் காத்திருப்பு நேரங்களும் பொருட்செலவுகளும் மீதப்படுகின்றன.