உத்தமபாளையம், ஏப்.17: உத்தமபாளையம் முல்லையாற்றில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் கண்ணன்(15). 9ம் வகுப்பு படித்து வந்தார். ேநற்று தனது நண்பர்களுடன் உத்தமபாளையம் முல்லையாற்றில் குளித்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் ஆனந்த்தும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டார். அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் பற்றிய புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் எஸ்.ஐ.முனியம்மாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.