செம்பனார்கோவில், ஏப்.12: செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளான குமாரமங்களம், சின்னங்குடி பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் 300 குடும்பத்திற்கு மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமையில் திமுகவில் ஐக்கியமாயினர். இது குறித்து மீனவ மக்கள் கூறுகையில், அதிமுக அரசு மீனவ மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.