விருத்தாசலம், ஏப். 11: விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பகுதியில் உள்ள செல்லியம்மன், அய்யனார், மாரியம்மன் கோயில்களில் கட்டிடங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால், கோயில்களில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்த சிலைகளை நீலகண்டேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வருடந்தோறும் நடைபெறும் ஊர் திருவிழாவின்போது அந்த சிலைகளை எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபட்டுவிட்டு, திருவிழா முடிவடைந்ததும் மீண்டும் நீலகண்டேஸ்வரர் கோயில் சிலைகளை பாதுகாப்பாக வைப்பது வழக்கம்.
இந்நிலையில் திருவிழாவிற்காக அந்த சிலைகளை எடுப்பதற்காக நேற்று பொதுமக்கள் நீலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர்.