மக்களவை தேர்தலையொட்டி மூணாறில் கம்யூ. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் பிரசாரம்

மூணாறு, ஏப். 9: மக்களவை தேர்தல் வரவிருப்பதையொட்டி நேற்று மூணாறில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் ஜோய்ஸ் ஜோர்ஜ் வாக்குகள் சேகரித்தார். நேற்று ஜோய்ஸ் ஜோர்ஜ் வாக்குகள் சேகரிக்கும் போது மூணாறில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மூணாறு முஸ்லிம் ஜமாத் பகுதியில் தொடங்கிய பேரணி மூணாறு தபால் நிலையம் வந்தடைந்தது. பின்னர் நடைபெற்ற மாநாட்டில் அனைத்திந்திய ஏஐடியுசி பொது காரியதரிசி அமர்ஜித் கவுர் சிறப்புரையாற்றினார்.

அப்போது, வரும் மக்களவை தேர்தலில் இடுக்கி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலும் 381 கோடி செலவில் மூணாறு போடி மேட்டு பாதைகள் சீரமைக்கவும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அரும்பாடுபட்ட ஜோய்ஸ் ஜோர்ஜ் இந்த முறையும் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். தேர்தல் வாக்கு சேகரிப்பின் பொது கூட்டத்தில் கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, தேவிகுளம் எம்.எல்.ஏ  ராஜேந்திரன் மற்றும் பழனிவேல், சசி, விஜயன் ஆகியோர் கலந்து

கொண்டனர்.

Related Stories: