பாபநாசம், ஏப். 9: தொல்லியல் வல்லுனர் குடவாயில் சுந்தரவேலு வெளிட்டுள்ள அறிக்கை: பாபநாசம் அருகே கடிச்சம்பாடி மாசிலா மணிஸ்வரர் கோயில் முகப்பில் பிள்ளையார் சிலை உள்ளது. இது ஒரு எழில்மிகு படைப்பாகும். இதன் தனிச்சிறப்பு அம்சம் தனது ஊர்தி மூஞ்சுறு மீது ஏறி நின்ற நிலையில் காட்சி தருவதாகும். இது காணற்கரிய ஒன்று. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் சிலைகள் இருந்தும் இவைகள் பத்ர மற்றும் பத்ம பீடங்களின் மீது இருக்குமாறு செய்விக்கப்பட்டுள்ளது.