போச்சம்பள்ளி, ஏப்.8: மத்தூர் அருகே கோட்டூர் அரசு பள்ளிக்கு ₹4.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கிராம மக்கள் கல்விச்சீராக வழங்கினர்.
மத்தூர் ஒன்றியம் கோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா, புதிய வகுப்பறை திறப்பு, நிரந்தர மேடை, பள்ளி ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா என ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்ட கல்வி அலுவலர் சபீக்ஜான் தலைமை தாங்கினார். வட்டரா கல்வி அலுவலர் முனிரெட்டி, மேற்பார்வையாளர் அசோக்ராஜா முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார்.