திருத்துறைப்பூண்டி ஏப்.8: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசராவ் நினைவு மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கர்நாடகமாநிலத்தில் 1907 ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி பிறந்த சீனிவாசராவ் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் மறைந்தபிரதமர் நேரு, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், ஓமந்துரார் போன்ற பல தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்.இவர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் தொழிலாளர்களுக்காக பாடுபட்டு 1961ம் வருடம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி தஞ்சாவூரில் காலமானார்.அவரது உடல் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முள்ளியாற்றாங்கரையில் செப்டம்பர் 30ம்தேதியன்று எரியூட்டப்பட்டது.2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகஅரசின் சார்பில் இவரின் நினைவாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.25 லட்சம் செலவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் ஏப்ரல் 10ம் தேதிபிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 30ம்தேதி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு மண்டபம் தற்போது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.