திருத்துறைப்பூண்டி ஏப்.3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரபகுதிகளில் நாகை மக்களவை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆதிரெங்கத்தில் தேர்தல் பணிமனை திறப்பு விழா திமுகமாவட்டபிரதிநிதிவக்கீல் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி திறந்து வைத்தார்.பின்னர் திறந்த வாகனத்தில் வேட்பாளர் செல்வராஜ் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசுகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை இந்தியாவிற்கே முதன் முதலில் தமிழ்நாட்டில் நான் எம்.பியாக இருந்தபோது கொண்டு வரப்பட்டது.திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக காவிரி டெல்டாவை முயற்சி மேற்கொள்வேன்.நரிமணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொண்டு வந்தது போல் வைக்கோலை பயன்படுத்தி காகித தொழிற்சாலை கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன் என்றார்.