கூத்தாநல்லூர்,மார்ச்21: கூத்தாநல்லூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் தனியார் கல்லூரி பேருந்துமோதி டூவீலரில் சென்ற புகைப்பட கலைஞர் பலியானார். கூத்தாநல்லூர் காந்திகாலனியில்வசிக்கும் அனோன்ஸ்ஹாஜா என்கிறஹாஜாமைதீன் என்பவரதுமகன் ஹபீபுல்லா(49) .இவர் கூத்தாநல்லூரில் உள்ள ஸ்டூடியாவில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வருகிறார் நேற்று காலை டூவீலரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கரவாகனத்தில் மோதியது, இதில் ஹபிபுல்லா சம்பவ இடத்திலேயே பலியானார். ஹபீபுல்லாவிற்குமும்தாஜ்என்கிறமனைவியும் நான்குமகள்களும் உள்ளனர்.