கூத்தாநல்லூர் அருகே டூவீலர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்: புகைப்பட கலைஞர் பலி

கூத்தாநல்லூர்,மார்ச்21: கூத்தாநல்லூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் தனியார் கல்லூரி பேருந்துமோதி  டூவீலரில் சென்ற புகைப்பட கலைஞர் பலியானார். கூத்தாநல்லூர் காந்திகாலனியில்வசிக்கும் அனோன்ஸ்ஹாஜா  என்கிறஹாஜாமைதீன் என்பவரதுமகன் ஹபீபுல்லா(49) .இவர் கூத்தாநல்லூரில் உள்ள ஸ்டூடியாவில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வருகிறார் நேற்று காலை  டூவீலரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி   பேருந்து இருசக்கரவாகனத்தில் மோதியது, இதில் ஹபிபுல்லா சம்பவ இடத்திலேயே பலியானார். ஹபீபுல்லாவிற்குமும்தாஜ்என்கிறமனைவியும் நான்குமகள்களும் உள்ளனர்.

பலியான ஹபீபுல்லா தற்போது தேர்தல்பணிகளுக்கானவீடியாஎடுக்கும் ஒப்பந்தத்தில்ஒப்பந்தமாகி இருப்பவர்.   நேற்றுஅதான் அதற்கானஅடையாளஅட்டையைபெற்று அதனை அறிந்து பணிக்குவந்திருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. கூத்தாநல்லூர்  எஸ்ஐ செல்வராஜ்தலைமையில் சம்பவஇடத்திற்குசென்றகாவல்துறையினர் ஹபீபுல்லாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்குஅனுப்பி வைத்து ,சம்பவம் குறித்து வழக்குப்பதிவு  செய்து பேருந்துஓட்டுனர் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: