நாகை, மார்ச் 21: நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி இ சேவை மையம் திடீரென மூடப்பட்டதால் சான்றுகள் பெற வந்த பொதுமக்கள் தவிப்படைந்தனர். நாகை மாவட்டத்தில் இ சேவை மையம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இசேவை மையத்தில் தினமும் பொதுமக்கள் பட்டா மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமண உதவித் திட்டம் பெற, மகப்பேறு உதவி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெற இ சேவை மையத்தை அனுகி எளிதாக பெற்று வருகின்றனர். இந்த இ சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர் நேற்று விடுமுறை எடுத்ததால் எந்தவித முன்னறிவிப்பு இன்றி திடீர் என மூடப்பட்டிருந்தது.