சென்னை, மார்ச் 20: விவாகரத்து வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கண் முன்பே மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்புத்தூர், சிறுவஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (44). மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர். இவரது வரலட்சுமி. இவர்களுக்க 10 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டு, மன உளைச்சலால் இருவரும் பிரிந்துள்ளனர். பின்னர், கடந்த 2009ம் ஆண்டு வரலட்சுமி விவாகரத்து கோரி சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைதொடர்ந்து 2011ம் ஆண்டு ஜீவனாம்சம் கோரியும் வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளும் விசாரணையில் உள்ளன. அடிக்கடி, நீதிமன்றம் வரவேண்டி உள்ளதாலும், எந்த தீர்வும் கிடைக்காததாலும் சரவணன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவரும் நீதிபதி இளங்கோ முன்பு ஆஜராகினர். அப்போது வரலட்சுமி நீதிமன்றத்தின் உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். வழக்கம் போல் வழக்கு விசாரணை நடந்து வந்தது.