ஆண்டிபட்டி, மார்ச் 19: நடைபெறவிருக்கும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நகர்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் மற்றும் தட்டி விளம்பரம் செய்யக்கூடாது. அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் விதிகளின்படி ஊழல் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். பிரசார வாகனத்திற்கு ஒலிபெருக்கி அனுமதி பெற்று பெட்டி வடிவிலான ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வாகனங்களில் கட்சி கொடி கட்டி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. மீரும் நபர்கள் மீது தேர்தல் நடத்தை விதி முறைப்படி விதிமுறை மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர். ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நடந்தது