ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து திருக்காரவாசலில் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்

திருவாரூர், மார்ச் 8: திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கண்டித்து நேற்று 40வது நாளாக  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த ஜனவரி  27ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் 40வது நாளாக இந்த போராட்டமானது போராட்ட குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் போராட்ட குழு செயலாளர் சுப்பையன், பொருளாளர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: