ஊட்டி, மார்ச் 7: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டிக்கு சிலர் தீ வைத்ததால், குப்பை கொட்ட இடம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ேமலும், வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிஞ்சும் குப்பைகளை கொட்டுவதற்காக ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குப்பை தொட்டி அதிகரட்டி ேபரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தது. சுழலும் வடிவில் ஒரு சின்டெக்ஸ் டேங்க் அதில் பொருத்தப்பட்டிருந்தது. அதில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.