பாலகொலா சந்திப்பு அருகே குப்பைத் தொட்டி எரிந்து நாசம்

ஊட்டி, மார்ச் 7: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டிக்கு சிலர் தீ வைத்ததால், குப்பை கொட்ட இடம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலகொலா சந்திப்பு (6வது மைல்) பகுதியில்  50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ேமலும், வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிஞ்சும் குப்பைகளை கொட்டுவதற்காக ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குப்பை தொட்டி அதிகரட்டி ேபரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தது. சுழலும் வடிவில் ஒரு சின்டெக்ஸ் டேங்க் அதில் பொருத்தப்பட்டிருந்தது. அதில், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த குப்பை தொட்டியை மர்ம நபர்கள் சிலர் எரித்துள்ளனர். இதில் பிளாஸ்டிக் டேங்க் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது. குப்பை தொட்டி இல்லாத நிலையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடமின்றி அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகரட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.