நாகை, மார்ச் 6: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 402 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 16 மனுக்களும், பொது மக்களிடம் இருந்து 386 மனுக்கள் என 402 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வேதாரண்யம் தகட்டூர் அரைக்கால் கரை பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவியும்,