குடிநீர் கட்டணம் குறைக்க கோரி கடை அடைப்பு போராட்டம்

சிவகிரி, மார்ச் 1: சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க கோரி சிவகிரியில் வணிகர்கள் கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சிவகிரி பேரூராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சிவகிரி வணிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கடை அடைப்பு போரட்டத்துக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். நேற்று காலை 6 மணிக்கு துவங்கிய கடை அடைப்பு போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. முன்னதாக, பகல் 12 மணி அளவில் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பபெற கோரி வணிகர்கள் பேரணியாக சென்று பேரூராட்சி பணியாளர்களிடம் மனு அளித்தனர்.

Related Stories: