பண்ருட்டி, பிப். 27: பண்ருட்டி அருகே டிபன்கடையில் தகராறு செய்து உரிமையாளர் மகனை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (55). இவர் அதே பகுதியில் டிபன்கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் பிரகதீஸ்வரனை கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் திருவேங்கடம் (42) என்பவர் கடைக்கு வந்து இட்லி கேட்டுள்ளார். அதற்கு பிரகதீஸ்வரன் இட்லி தீர்ந்துவிட்டதாக கூறி உள்ளார்.