காவல்துறை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கடலூர், பிப். 26: கடலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடும்பத்திற்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. எஸ்.பி. சரவணன்  துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, சர்க்கரை நோய், எக்கோ, எலும்பு உறுதி சோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்கள் பாண்டுரங்கன், கேசவன், முகுந்தன், வினோத்குமார் உள்பட பலர் சிகிச்சை அளித்தனர்.

Related Stories: