பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப். 22: பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலங்களில் உரிய நிவாரணம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று சிஐடியு  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலங்களில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சீன பட்டாசுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக சிஐ.டியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மாலதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல் கலந்து கொண்டனர்.

Related Stories: